Friday 23 December 2011

பெரியாருக்கு வீரவணக்கம்



எங்கள் பகுத்தறிவு பகலவனோடு
எம் மக்களின் பகுத்தறிவும் சேர்ந்து மறைந்த தினம் இன்று...

பார்ப்பனன் எம் எதிரி,அவன் சொன்ன சாதி மட்டுமல்ல
சாமியே தேவையில்லை என வீசி எறிந்த வீரன்...

எவனாயிருந்தால் எனக்கென்ன?
என பட்டதைப் பேசும் பகுத்தறிவாளி...

திராவிட நாடு இல்லையேல் நீயும்,நானும் அடிமை
என உண்மையை உறக்கச் சொன்ன உத்தமன்...

சாதி என்னும் வஞ்சத்தை
தன் சினம் கொண்டு எரித்த சிங்கம்...

மலையாளி கோவிலுக்குள் செல்ல வைக்கம் சென்றார்
இன்று அவர் இருப்பின் மலையாளியை
கேரளாவிலிந்து விரட்டியிருப்பார்...

பணமும் பதவியும் பிச்சைக்காரனுக்கு என
இறுதி வரை போராடியே வாழ்ந்த போராளி...

நீயும் நானும் சாணி அள்ளாமல் கணிணி தட்ட
தன் வாழ்வை ஈந்த வள்ளல்...

இந்த சமூகத்தின் ஆணிவேர் அவர்
அதன் கிளைகள் இன்று பட்டுப்போய் சீரழிகிறது
அது வேரின் தவறல்ல
வேருக்கு வெந்நீர் ஊற்றிய நம் தவறு...

No comments:

Post a Comment