Wednesday 7 December 2011

காணவில்லை: இந்திய இறையாண்மை

என் இனிய இந்திய பெருங்குடி மக்களே! அருமைமிகு காந்தி தாத்தாக்களே! நேரு மாமாக்களே! சுருக்கமா சொல்லணும்னா காங்கிரசு பேரியக்கமே!



நாட்டாமை படத்துல பொன்னம்பலம் சொல்ற மாதிரி “இப்பிடி ஒரு சந்தர்பத்துக்காகத் தான் 18 வருசமா காத்துகிட்டிருந்தேன்”னு சொல்லத் தோணுது இந்த காங்கிரசுகாரங்கள பாத்து. சொல்லப் போனா வார்த்தைகள ரொம்ப கட்டுப்படுத்திதான் எழுதிட்டிருக்கேன்.2009 ல ஈழப்போர் இறுதி கட்டத்துல இருந்தப்ப பல லட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டாங்க.அப்ப தமிழகமே பொறுக்க முடியாம கதறினோம். இன்னும் மனசுல அந்த காயம் வலிச்சுகிட்டே இருக்கறது நம்ம ஒவ்வொருத்தருக்கும் தெரியும்.அப்படி உச்சகட்ட உணர்ச்சியோட தமிழகமே கொந்தளிச்ச நிலையில கூட நாம வன்முறைல இறங்கல அதுக்கு பதிலா நம்ம தோழர்கள் தங்களைத் தாங்களே கொழுத்திகிட்டாங்க.அப்பவெல்லாம் இந்த காங்கிரசு என்ன பண்ணுச்சு நம்ம உணர்ச்சிகளை எல்லாம் நம்ம தலைவர்கள் மேடைல பேசினப்ப இவரு இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசினாருனு சொல்லி ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துல’ தூக்கி சிறைக்குள்ள போட்டுச்சு.அதுமில்லாம வெளிநாட்டு பிரச்சனைல மத்திய அரசு தலையிட முடியாதுன்னும் சொல்லுச்சு. இது ஒரு பக்கம் இருக்கட்டும். கடந்த 3 நாளா கேரளாவுக்குள்ல நுழையுற தமிழ்நாட்டு வண்டிகள எல்லாம் அடிக்கறாங்க,இரண்டு மாநிலத்துக்குள்லயும் போக்குவரத்து சுத்தமா நின்னுடுச்சு. எதுக்காக? முல்லைப் பெரியாறு குறுக்க புது அணை கட்டணுமாம்.பழைய அணை உடைய போகுதாம் (1979 ல இருந்து உடைய போகுது உடைய போகுதுனு தான் சொல்றானுங்களே ஒழிய உடையற பாட்ட காணமேப்பா). சத்தியமா அணை உடையாதுனு ஊர் உலகமே ஆதாரத்தோட சொன்னாலும் கேட்காம கடப்பாறைய தூக்கிட்டு அனைய உடைக்க கிளம்பிட்டானுங்க கேரளாக்காரனுங்க. ஈழப்போர்ல இந்திய இறையாண்மை பத்தி பேசுன வாயெல்லாம் இப்ப எங்க போச்சுங்கிறது தான் நம்ம கேள்வி. கேரளால காங்கிரசு அரசு நடக்குதுங்கிறதுக்காக இறையாண்மைய சங்கிலி போட்டு கட்டிடீங்களா? இல்ல பாதிக்கப்படுறது எதிர்க்கட்சி (அ.தி.மு.க) அரசுதான,அதுவும் தமிழனுங்கதானேனு அலட்சியமா? ஒரு இனஅழிப்ப தடுத்து நிறுத்தச் சொன்ன சீமானால உங்க தேசத்துக்கு ஆபத்துன்னு தூக்கி உள்ள போட்டிங்களே இரு மாநிலத்துக்கு பொதுவான அணைய உடைச்சே தீருவேன்னு சொல்ற உம்மன் சாண்டினால உங்க தேசத்துக்கு ஆபத்தில்லையோ? இலங்கை பிரச்சனை வெளி நாட்டு பிரச்சனை தலையிட முடியாதுனு சொன்னீங்க ரைட்டு விடு, கேரளாவும், தமிழ்நாடும் இந்தியாவுல தான இருக்கு? (அந்த உருமா கட்டுன தாத்தாவுக்கு யாராவது இந்தியா மேப்ப காட்டுங்கப்பா) கேரளா அண்டப்புளுகு விடுதுன்னு தெரிஞ்சும் ஏன் இந்த அரக்கத்தனமான அமைதி? தெரிஞ்ச பதில் தான்பா இவனுங்கள நம்புனா புல்லு வெட்டக் கூட முடியாது .இனிமேல் நம்ம நாட்டு மக்கள் எல்லாரும் மத்திய அரசுகிட்ட காரியம் ஆகணும்னா நேரா ஒபாமாக்கு கடுதாசி போடுங்கோ.அவரு பாத்து கையெழுத்து போட்டு அணுப்பினா தான் இங்க வேலைக்காகும்.ஏன்னா இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் மாதிரி மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவுக்கான அமெரிக்கப் பிரதமர்.அங்க அடிச்சா தான் அவருக்கு இங்க வலிக்கும்.

No comments:

Post a Comment