Tuesday 20 December 2011

பிரிந்தோம்... சந்திப்போமா?

வாசம்...
உன் கழுத்தொடு வீசிய
உன் வாசம்...
பல இரவுகள்
சில பொழுதுகள்
என் ரோமங்களை குத்திடச் செய்த
உன் வாசம்...
மறக்கவில்லை...
இன்னும் நாசியில் அமர்ந்து
என் நினைவுகளை சீண்டுகிறது...



என்ன பெரிய நினைவுகள்?
பெரிதுதான்...
நான் பெரிதாய்
எண்ண மறந்த பெரிது...

மதுவும் மாதுவும்
கரைந்து நீந்திய
பல இரவுகளைத் தாண்டிய
பின்னிரவுகளில்
உனக்குத் தெரியாமல்
உன்னருகே வந்து படுத்தேன்
ஒவ்வொரு முறையும்
உடனே என்னை அணைத்து
நாய் குட்டிபோல
என் தோளில் குழைந்த
கலைந்த கேசமும்,குழைத்த கண்ணங்களும்
நினைவுகளில் பெரியவைதான்...

வரவேற்பறையில்...
காய்கறி நறுக்கியபடியே நீ அமர்ந்திருக்க
உன் மடியில் சாய்ந்து
வியர்வை வடிந்த உன் வயிற்றில்
என் கண்ணம் பதிய
முந்தானையில் முகம் மூடி
கனவில்லா உறக்கம் கொண்டது
கனவின் மடியில் உறங்கியதால்
அது நினைவுகளில் பெரியவைதான்...

காலையில்
உன் முகம் கண்டு சென்றேன்


மாலையில்
என் முகம் அடையாளம் காட்ட
சாலை விபத்தருகே
நீ வந்தாய்...
இந்த காதலைத் தாண்டியும்
போதை தேடிய மனதால்
நினைவுகளோடு மட்டும்
பிரிந்தது என் பிழை...

காதலை சாதலாக்கும்
போதை...

சாராயப் போக்கு
சவப்போக்கு...








No comments:

Post a Comment