Tuesday 17 January 2012

யாரோடு வாழ்வது?




காயங்கள் எப்பெரிதாயினும்
காலத்திடம் மருந்துண்டாம்
வேண்டாம் எனக்கு
என் காயங்கள் அற்பமானதல்ல
என் இதயத்தில் கீறிவிட்டது
உன் நகம்
குருதியாய் பொங்கிய கண்ணீர்
உன் நினைவுகள்
எதிர்கால மகிழ்ச்சிகள்
உன்னால் களவாடப்பட்டது உண்மைதான்
அதனால் என்ன?
கடந்தகால பொக்கிஷங்களை
எதிர்காலத்தில் இட்டு நிரப்புவேன்
போதவில்லையெனில்
இன்னும் ஆழமாய் தோண்டுவேன்
இடைமறிக்கின்றனர் சிலர்
காயம் முற்றினால்
சீழ் பிடித்து செத்துப் போவாய் என்றனர்
நீயே சொல்
நான் யாருடன் வாழ்வது?
உன்னோடா?
காயங்களற்ற என் சவத்தோடா?

No comments:

Post a Comment