Sunday 15 January 2012

வேட்டை-செம ட்ரைலர்

அடிதடி,அதிரடி லிங்குசாமியிடமிருந்து மற்றுமொரு மசாலா.

செம யூத்து ஆர்யா, எஸ்.டீ.டி பூத்து மாதவன், வெடக் கோழி அமலா பால், முத்துன கோழி சமீரா ரெட்டி, மொழுக்குனு ஒரு வில்லன், பரக்கு பரக்குனு பங்களா நாய் மாதிரி ஒரு வில்லன்.இவங்க எல்லாரும் சேர்ந்து ஆளுக்கொரு சீன் மாறி மாறி வந்து ஸ்பீக்கர் கிழிய கிழிய ஆட்றதுதான் இந்த வேட்டை.



கதை என்னன்னா... ஹீரோக்கள் 2 பேரும் அண்ணன் தம்பி,ஹீரோயின் ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி, வில்லன்கள் 2 பேரும் எதிரிகள்.ஹீரோவாகிய அண்ணன் மாதவன் பயந்தாங்கொள்ளி, தம்பி ஆர்யா வெட்டியா இருக்குற மாஸ் ஹீரோ. ஹீரோக்களோட போலீஸ் அப்பா புட்டுகிட்ட பிறகு அப்பாவோட வேலை பசங்களுக்கு வருது.மாதவன் அதுல போலீஸ் ஆயிட்றார்.எங்க இனி நீங்களே கதைய யோசிங்க பார்ப்போம். அதாங்க... அதாங்க... அதே தான்... அட ரொம்ப அதிகமா யோசிக்காதீங்க கம்மியா ஃபீல் பண்ணுங்க போதும்.வில்லனுங்களுக்கு இடைஞ்சலா வர்ற அண்ணன் தம்பி கூட்டணிய புரட்ட நினைக்கறாங்க வில்லனுங்க.இதுல அண்ணன் மாதவன் டம்மி பீசுனு தெரிய வந்து அவர் கால உடைச்சிட்றாங்க.அவருக்கு தம்பி ஆர்யா தண்டால்,பஸ்கி,பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி குடுத்து பெரிய வீரன் ஆக்கிடறார்.அண்ணன்,தம்பிகள் வில்லனுங்கள எப்படி புரட்டி எடுக்கறாங்கங்கிறது தான் கதை.வேற எப்படி  அடிச்சு தான்.ஆர்யா தம்பி வில்லனுங்கள புரட்டுதோ இல்லையோ அமலா பால நல்லாவே புரட்டுறாரு.ஃபிட்டா இருக்கறாப்ல,நல்லா ஆட்றாப்ல,முறைக்கறாப்ல, சண்டை போட்றாப்ல,காமெடி பண்றாப்ல சரி அவரு மாஸ் ஹீரோ ஆயிட்டாரு இதுக்கு மேல என்ன எதிர்பார்க்க முடியும்? ஆனா தம்பி வேகமா தமிழ்ல டயலாக் பேசும் போது (அதுவும் க்ளைமேக்ஸ்ல) தமிழ் தான் பேசறாரானு டவுட் ஆயிடுது.



நம்ம மாதவன் இப்ப பூதவன் மாதிரி இருக்காரு.முதல் பாட்டுல அவர் டான்ஸ் ஆடறக்கு பட்ற கஷ்டத்த பாத்து நமக்கே கண்ணு கலங்குது.போலீஸ் வேசத்துக்காக தொப்பை எல்லாம் போட்டு ரிஸ்க் எடுத்திருக்காரு.பயந்தாங்கொள்ளி கேரக்டர சிறப்பா பண்ணிருக்காரு கட்ட கடசில ஹீரோயிசம் பண்ணாலும் இந்த கேரக்டருக்கு அவர் தேவையில்லங்கிறது நம்ம கருத்து.
அமலா பால் இந்த படத்துக்கு தேவையான அளவுக்கு காஸ்ட்யூம் போட்டுட்டு எந்த வேலையும் செய்யாம அமைதியா லவ்வாங்கி பண்றாங்க.தைரியமா எக்கச்சக்க லிப் கிஸ் அடிக்குது பொண்ணு. இனி டிமாண்ட் எகிறுமே.

சமீராவ அறிமுக காட்சில தாவணில பாத்ததும் பயந்துட்டோம் எங்க முழுக்க முழுக்க இப்படியே வந்திருமோனு.நல்லவேளை சட்டுபுட்டுனு மாதவனுக்கு கட்டி வெச்சு,அப்பப்ப பெரிசா டயலாக் குடுத்து கன்ட்ரோல் பண்ணி வெச்சுட்டாங்க.
வில்லன்கள் 2 பேரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கறாங்கோ,அவங்க 2 பேரையும் ஆர்யா அடிக்கறதால இவங்க 2 பேரும் மாதவன அடிக்கறாங்கோ, நடுவுல போர் அடிக்கறப்ப அடியாள அப்பறாங்கோ.மெயின் வில்லனா வர்ற அண்ணாச்சி ஸ்பாட்ல பே,பே,பா,பூ,இ,ஆ,ஊனு தான் டயலாக் பேசிருப்பார் போல வசனத்துக்கும் அவர் உதட்டசைவுக்கும் சுத்தமா பொருந்தல.
இரண்டாவது வில்லனுக்கு ரெண்டே டயலாக்.பாடல்கள்ல “பப்ப பப்பா” பாட்டு ஆட்டம் போட வைக்குது மத்ததெல்லாம் ஓ.கே. வசனங்கள்ல லிங்குசாமியின் ட்ரேட்மார்க் வசனங்கள் வந்துற கூடாதுனு ரொம்பவே மெனக்கெட்ருக்காங்க (அதாங்க “அவன் யாரா இருக்கட்டும்,எவனா இருக்கட்டும் எனக்கு கவலை இல்ல”,”யார்றா நீ?”,”இவன்கிட்ட என்னமோ இருக்கு!” இது மாதிரி).அதுலயும் ஒரு சில வசனங்கள் புதுசா இருக்கு.உதாரணத்திற்கு ரத்ததானம் பண்ணும் வில்லனுங்கள பாத்து ஆர்யா சொல்றார் “நீங்க குடுத்த இரத்தத்த எடுத்து வெச்சுக்கங்கடா உங்களுக்கே தேவைப்படும்”.சில வசனங்கள் டார்ச்சர் பண்ணுது உதாரணத்திற்கு ஒரு சண்டை காட்சில ஆர்யா வில்லனுங்கள அடிச்சிட்டிருக்கும் போது பிண்ணனில பெரிய பெரிய பாலித்தீன் கவர் கூடைகள்ல பஞ்ச நிரப்பி அத பறக்க விட்டுட்டு இருக்காங்க அப்ப ஒரு அடியாளோட தலை ஆர்யா குத்துன குத்துல பாலித்தீன் கூடைக்குள்ள போயி மூஞ்சியெல்லாம் பஞ்சு ஆயிடுது அப்ப ஆர்யா கேக்கறார் “செம பஞ்ச்சுல்ல(punch)” முடியலடா சாமி.



அண்ணி கொழுந்தன் சண்டை,ஆர்யா அண்ணிக்கு அடங்கி போறது,சமீராவ வெச்சே அமலா பால கல்யாணம் பண்றது,ஆர்யா-அமலா பால் ரொமான்ஸ்,அங்கங்க லைட்டா வர்ற காமெடி இதெல்லாம் தான் ஓரளவுக்கு படத்த சுவாரசியப்படுத்துது.கதை விவாதத்துக்கு நன்றினு ஒரு 5 பேரோட பெயர டைட்டில்ல போடுறாங்க அவங்க அப்படி என்னதான்யா விவாதம் பண்ணீருப்பாங்க?
நாசர்ங்கிற அருமையான திறமைசாலிய இன்னும் தமிழ் திரையுலகம் வீணடிச்சுட்டு தான் இருக்கு.நச்சுன்னு அவருக்குன்னு கதாபாத்திரம் குடுத்து பெர்ஃபார்ம் பண்ண விட்டா மனுசன் பிண்ணி பிண்ணி எடுப்பார்.

தலைப்பு விளக்கம்- ட்ரைலர்ல பாத்தத விட பெரிசா படத்துல எதுவும் இல்ல.ஹிட் ஆனாலும் ஆச்சர்யபட்றதுக்கில்ல ஆனா புதுசா எதுவும் எதிர்பார்த்து போயிடாதீங்க.

No comments:

Post a Comment