Wednesday 5 October 2011

மொழி

மொழி-just for communication.இன்றைய தலைமுறையினராகிய நம்மில் பலர் கொண்டுள்ள கருத்து.இதை அலச வேண்டும் என்பது என் விருப்பு.விலங்குகளின் மொழி சத்தம் அச்சத்தம் மட்டும் போதும் என்று நின்றதால்(just for communication) அவை உடல் ரீதியான பரிணாம வளர்ச்சி மட்டுமே பெற்றன.உடலால் மாறிக் கொண்டிருந்த மனிதன் மனதால் வளர்ச்சி பெறத் தொடங்கியது மொழியுடன் தான்.ஒலிகள் வார்த்தைகளாகி வார்த்தைகள் வாக்கியங்களாகி அவை கருத்துக்களாகவும் காவியங்களாகவும் உருவாயின.வரையறுக்க முடியாத வரலாற்றுக் காலத்திலிருந்து முன்னோர் கொண்ட அனுபவங்கள் தான் குறள் தொடங்கிய “மனப்பாட செய்யுள்கள்”.தமிழகம் ஆண்ட மூவேந்தர்கள் காலத்தில் குறளும்,தமிழும் தான் கல்வியாக இருந்தது .அதைப் படித்தவர்கள் முன்னோர்களின் அறிவும் பெற்றனர் தன் காலமும்,வரலாறும்,பெருமையும் அறிந்திருந்தனர்.ஆதிக்கம் செலுத்த அந்நியர்கள் வந்த போது முன்னின்று மூச்செறிந்து இனம் காத்தனர்.வாளுக்கும் துப்பாக்கிக்குமான வித்தியாசத்தில் அடிமையாகத் தொடங்கினான் தமிழன்.இன்று வரை முதலாளிகளை மாற்றுகிறானே ஒழிய அடிமைத்தனம் ஒழியவில்லை.வெள்ளையர் தான் கொண்ட பரந்த நிலப்பரபை ஆட்சி புரியத் திணறி தன்னுடன் communication செய்ய ஆங்கிலம் அறிந்த அடிமைகளை உருவாக்கினான்.அவர்கள் சீரும் சிறப்புமாக தன் மக்களையே வெள்ளையனுக்காக மேய்க்கத் தொடங்கினர்.வெள்ளையனிடம் வேலை பெற ஆங்கிலம் கற்றவன் வெள்ளையனுக்குப் பின்னும் ஆங்கிலத்தைக் கைவிடாமல் காப்பற்றினான்.இன்றும் வெள்ளையனுக்காக ஆங்கிலத்தை கணிணியில் விடிய விடிய தட்டிக் கொண்டு தூக்கமில்லாமல் மன அழுத்தம் கொண்டு அதிரும் இசை நடுவே சாராயம் ஊற்றி மனசாந்தி அடைகிறான் “மனப்பாட செய்யுள்” மறந்த தமிழன்.ஆங்கிலத்துக்கு சற்றும் சளைக்காமல் பெரும்பாண்மை என்ற போர்வையில் வந்து கதவை இடித்துக் கொண்டிருக்கின்றது ஹிந்தி.வெள்ளைக்காரனுக்கு பதிலாக ஹிந்திக்காரன்(உடன் இத்தாலிக்காரியும்) இந்தியா முழுமைக்கும் ஒரு மொழி வேண்டும் என்பது வாதம்... இந்தியா முழுமையும் ஓர் இனம்,ஓர் வரலாறும் இருந்தால் இவர்கள் சொல்வது நியாயம். But this is not reupblic of india,this is republic of indian union. இந்தியா என்பது வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற வரைபடத்தில் உருவான ஒரு கூட்டாட்சி.இதில் தமிழ்நாடும்,தமிழனும் பங்கு கொண்டதால் வந்தது முதலுக்கே மோசம்.கூட்டாட்சியில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தருவதே நியாயம் என்பதை மறந்து நான் சொல்வதைப் படி எனத் திமிர் பிடித்துச் சொன்னான் ஹிந்திக்காரன்.கேட்க மறுத்தோம் நாம்.விளைவு இன்று தாக்குதல் வேறு வழியாக வந்து கொண்டிருக்கின்றது. முதலில் நமக்கு நம் வரலாறு மறக்கடிக்கப்பட்டது. நாம் படித்த வரலாற்று புத்தகங்களில் lodi dynasty,akbar,ashoka என்ற மன்னர்களை பற்றித்தான் சொன்னார்கள்.தென்னிந்தியாவையே ஆண்ட ராசராச சோழனோ, கம்போடியா வரை வென்ற ராசேந்திர சோழனோ அப்புத்தகதில் எந்த மூலையிலும் இல்லை.  நாம் யார் என்றே மறந்த போது மொழியைப் பற்றி நமக்கென்ன கவலை? ஆங்கிலமும், ஹிந்தியும் வேலைக்கான தகுதிகள் ஆயின. பணம் பெறுவதே முதல் பணி எனத் திரிந்தவன் பொருளுக்காக மொழிகளைக் கற்றான். பணம் தராதவை எல்லாம் அவனுக்கு வெற்றுப் பிண்டங்களாகத் தெரிந்தது பெற்றோர் உட்பட தமிழும். உபயம்: முதியோர் இல்லங்கள். சங்க காலத்திலும் எந்தக் காலத்திலும் முதியோர் இல்லங்களைத் தமிழன் அறிந்ததில்லை.இன்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு ஹெட்செட்டில் ஹிந்தி பாட்டு கேட்டுக் கொண்டு “tamil's value in the world is 0”என்கிறனர். தமிழ்வழிக் கல்வியை “worthless” என்கின்றனர்.”compulsory hindi is essential ” என்கிறனர். அவர்களின் அளவீடெல்லாம் பணக்கட்டைப் பொறுத்தே அமைகின்றது.வெட்கத்தோடு ஒத்துக்கொள்வோம் நாம் அடிமைகள் என்று. 
சரிப்பா central government job கு hindi படிக்கணும்ல?   தாராளமாகப் படிக்கலாம் நண்பா ஹிந்தி அவசியம் என்ற நிலையில் படிக்கலாம் ஆனால் ஹிந்தி அத்தியாவசியத் தேவை என்று சொன்னால் அதைத் தான் தவறு என்கிறோம்.உன் பணி சவுகரியத்திற்காக படிப்பதை விட்டு ஹிந்திக்காரன் இங்கே வந்து வாழைப்பழம் வாங்க வசதியாக நாம் ஹிந்தி படிக்க வேண்டும் எனப் பேசுவது முட்டாள்த்தனம்.
குறள படிச்சா campus la place ஆக முடியுமா?
தகுதியையும் அறிவையும் போட்டு குழப்ப வேண்டாம். நீ கற்கும் கல்வி உன் பணிக்கான தகுதி.உன் இலக்கியத்தில் நீ படிக்கும் அறிவு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முடிவெடுக்க உனக்கு உற்ற தோழனாய் இருக்கும் என்பதை அனுபவித்தால் உணர்வாய்.
world டோட flow ல போக வேணாமா?
கண்டிப்பாக போக வேண்டும்.தமிழர் ஆதி காலம் தொட்டே ரோம்,எகிப்து,பர்மா உடன் எல்லாம் வர்த்தகம் கொண்டனர்.ஆனால் தமிழராய் தான் இருந்தனர்.அதே போல் தான் ஊரோடு போவதென்றால் உன் ஆடையை உடுத்திக் கொண்டு போ அது தான் உன் அடையாளம்.அதை விடுத்து அடுத்தவன் ஆடையில் இருந்து நூலை உரித்து உடம்பை மறைக்க நினைத்தால் அரை நிர்வாணமாகத் தான் சுற்றவேண்டும் அடையாளத்தை இழந்து.




4 comments:

  1. பாண்டி - உனது கருத்துகளை நான் ஆமோதிக்கிறேன்.... உனது நற்செயல் தோடரட்டும்...

    ReplyDelete
  2. நன்றி மச்சி...

    ReplyDelete
  3. Perumbaanmaiyil 'na'garaththaiyum, raasendiranai pakkaththil appuththagathaiyum( ip-ottru) gavanika. Nalla sinthanai. vaazhththukkal. Mudinthaal Maa.So.Victor in puththagangal padika..

    ReplyDelete
  4. பிழைகளுக்கு மன்னிக்கவும்.ம.சோ.விக்டரின் தமிழர் சமயம் எனும் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.

    ReplyDelete