Friday 7 October 2011

அண்ணாவும் கிரிக்கெட்டும்

அண்ணா ஹசாரே.... இந்த தாத்தாவ பார்த்து வாயப் பொளந்தவங்கள்ல நானும் ஒருத்தன்.காங்கிரஸ் ஆட்சிக்கு பெருசா சவுக்கடி குடுத்த பெரிய மனுசர். நல்ல வேளை அவருக்கு மக்கள் ஆதரவும் முக்கியமா மீடியா ஆதரவும் இருந்துது.அதனால போராட்டம் களை கட்டி பட்டைய கிளப்புச்சு. இல்லாட்டி இவரும் இரோம் சர்மிளா மாதிரி கவனிக்கப்படாமயே போயிருப்பார். சரி எல்லாம் முடிஞ்சுது வழக்கம் போல கவர்மெண்டு கம்பி நீட்டிடுச்சு.ஆனா தாத்தா விட்றதா இல்ல மறுபடியும் உண்ணாவிரதம்னு அறிவிச்சுருக்காரு.

யார நம்பி தாத்தா இப்பிடி ஒரு ஸ்டெப் எடுத்தீங்க? நம்ம மக்களையா? முதல் போராட்டத்துக்கு ஆதரவு தந்தாங்கன்ற நம்பிக்கைதான? நம்ம மக்கள் எல்லா விசயத்துலயும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு இருந்தா தான் கவனிப்பாங்க. முழுக்க முழுக்க மீடியா ஆதரவோட பல பரபர திருப்பங்களோட உண்ணாவிரதம் இருந்தா தான் மக்கள் நியூஸ் அ பாப்பாங்க இல்லாட்டி அசால்ட்டா சேனல மாத்திருவாங்க.அதனால முன்னாடியே ஸ்க்ரிப்ட்ட ரெடியா வெச்சுக்கங்க.
ஏன்னா நம்ம மக்கள் கிரிக்கெட்ட திருப்பி திருப்பி பழைய மேட்ச கூட பாப்பாங்க ஆனா தன் ஊர் விவசாயிய பத்தி செய்தி வந்தா கூட தனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி போய்டுவாங்க. ஏன்னா தங்களுடைய மொத்த தேச பக்தியையும் கிரிக்கெட்டுல முதலீடு பண்ணிருக்குற தேசம் தான இது. அப்புறம் நம்ம மீடியா.... மக்கள் பிரச்சனைக்காக வெளிச்சம் காட்டாம தங்களோட கருத்துக்கு ஆதரவான போராட்டங்களை மட்டும் தான் காட்டுவாங்க.ஒரு இனப் படுகொலையை நிறுத்த சொல்லி தமிழ்நாடே கதறுனப்ப கண்டுக்காத மீடியாக்கு திடீர்னு இந்த இந்தியன் தாத்தா மேல பாசம் வந்ததுல அவங்களுக்கு அரசியல் லாபம் இல்லாம இருக்காது.அவங்களுக்கு பிடிக்கலனா உங்களையும் கண்டுக்க மாட்டாங்க கவனம்.


No comments:

Post a Comment